நீரிழிவு மற்றும் உணவு: மூன்று கட்டுக்கதைகள் அழித்தொழிக்கப் பட்டுள்ளன.

நீரிழிவு மற்றும் உணவு: மூன்று கட்டுக்கதைகள் அழித்தொழிக்கப் பட்டுள்ளன.

 

உடலில் அதிக ரத்த சர்க்கரை அளவு இருக்கும் நிலை நீரிழிவு எனப்படுகிறது. 2015 ஆம் ஆண்டில்  உலகெங்கிலும் 415 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீரிழிவி னால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவின் தீய விளைவுகளை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ம்  தேதி உலக நீரிழிவு தினமாக கொண்டாடப்படுகிறது.

எந்தவொரு வியாதியைப் போன்றும்  நீரிழிவு நோய்க்கும் பல கட்டுக்கதைகள் உள்ளன.

அவற்றைப் பார்த்து ஒழித்து அழித்து விடுவோம்.

 

# 1: நான்  நீரிழிவு நிலைமைக்கு முந்தைய நிலையில் இருப்பதாக  நினைக்கிறேன். நான் அடிக்கடி சாப்பிட வேண்டுமா?

நீரிழிவு நிர்வகிப்பதில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயம் என்னவென்றால், எப்போது சாப்பிடுவது , ​​எவ்வளவு அடிக்கடி சாப்பிடுவது என்பதாகும் , "என்கிறார்   ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேத நிறுவனர்-இயக்குனர், மற்றும்  இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஆயுர்வேத மருத்துவராக இருக்கும் டாக்டர் நிஷா மணிகண்டன்.

"இன்று ஒழுங்கற்ற சிற்றுண்டி கொறித்தல் என்பது மிகவும் பொதுவானது. ஆயுர்வேதத்தில், இரண்டு கால உணவையே  பரிந்துரைக்கிறோம் - நீரிழிவு தோன்றுவதற்கு முன்னதான நிலையில் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு மூன்று தடவை சாப்பிடப் பரிந்துரைக்கிறோம். மற்ற நேரங்களில், நீங்கள் மோர், அல்லது மென்மையான தேநீர், இளநீர்  போன்ற எதையேனும் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் பல முறை சாப்பிடும் போது, ​​உடலில் நிறைய இன்சுலின் சுரந்து அதனால் இன்சுலின் எதிர்ப்பு உருவாக்கும். உடல் அதை பயன்படுத்த முடியாது. சரியான நேரங்களில் உணவு எடுத்துக் கொள்ளாமை வெளிப்படையான நீரிழிவு நோயை ஏற்படுத்தும் மற்றொரு காரணியாகும்.

 

டாக்டர் நிஷாவின் நான்கு பொன் விதிகள்

  1. ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று தடவை முழு உணவு  சாப்பிடுங்கள், நாள் ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை சிற்றுண்டி எடுத்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை, ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் ஒவ்வொரு உணவு / சிற்றுண்டி எடுக்க வேண்டும்.
  2. சாப்பிடாமல் இருப்பதைத்  தவிர்க்கவும்.
  3. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவிலும் கார்போஹைட்ரேட்  ஒரே அளவு இருக்கட்டும்.
  4. சாதாரண நல்ல கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்கள் மற்றும் கீரைகள் நிறைய உள்ள ஒரு உணவு பரிந்துரைக்கப்படுகிறது.

 

 

# 2: எனக்குநீரிழிவு நோய் இருக்கிறது.. என் உணவில் பழங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனவா?

"நாம் பார்த்தவரையில், உணவு மீது அதிக கட்டுப்பாடுகளை வைத்திருந்தால், அது மன அழுத்தத்தை  ஏற்படுத்துகிறது. எனவே, நீங்கள் எதையும் தவிர்க்க வேண்டிய தில்லை, ஆனால் மிகவும் குறைவான அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள், என்று டாக்டர் நிஷா கூறுகிறார்.

 

என்ன அனுமதிக்கப்படுகிறது?

  • பெர்ரி மற்றும் மாதுளை போன்ற சிறந்த பழங்கள்.
  • ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள்  அனுமதிக்கப்படுகிறது.
  • அதிக கிளைசெமிக் குறியீடு கொண்ட மாம்பழங்கள் மற்றும் வாழைப்பழங்கள் போன்ற பழங்கள் கூட மட்டுப்படுத்தப்பட்ட அளவுகளில் எடுத்துக் கொள்ளலாம்.
  • கரேலா ஜமுன் (பாகற்காய் மற்றும் வெல்லம் ) சாறு உங்களுக்கு நல்லது.

 

 

# 3: நான் தயிரைத் தவிர்க்க வேண்டுமா?

ஆயுர்வேத அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கான ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேதக்  கல்லூரி இணை பேராசிரியரான டாக்டர் உமேஷ் கூறுவதாவது:

  • குறிப்பாக அதிகமான தயிர், இரவுகளில் தவிர்ப்பது  நல்லது.
  • மீன்  இறைச்சி சாப்பிடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
  • பிட்சா,  கொத்துக்கறி இறைச்சி, கேக் போன்ற  பேஸ்ட்ரி உணவுகள்   மற்றும் கொழுப்பு நிறைந்த எண்ணெய், நெய் போன்றவற்றின் அதிகப்படியான அளவு,  புதிதாக அறுவடை செய்யப்பட்ட தானியங்கள் ஆகியவை   உடலில் உள்ள கப  தோஷத்தை அதிகரிக்கின்றன..
  • புதிதாக அறுவடை செய்யப்பட்ட தானியங்களை தவிர்ப்பது ஆயுர்வேதத்தில்  வலுவாக பரிந்துரைக்கப் பட்டிருக்கின்றது.  பழைய தானியங்கள், உடலுக்கு நல்லது.

 

நீரிழிவு முந்தைய நிலைக்கு குறிப்புகள்

  • நெல்லிக்காய் மற்றும் மஞ்சள் தூள் (2: 1) சேர்த்த ஒரு எளிய கலவை அதிசயங்கள் நிகழ்த்தும்.
  • பழம், பேரீச்சை, மற்றும் அத்திப்பழ உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அவற்றின் மீது சிறிது தேனை ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள்.

 

நீரிழிவு நோய்க்கான வெண்டைக்காய் வறுவல்

தேவையான பொருட்கள் :

வெண்டைக்காய் - 250 கிராம்

தேங்காய் - 1 ½ டீஸ்பூன்.

பூசணி - 2 டீஸ்பூன்.

புதிய கொத்தமல்லி - 1 டீஸ்பூன்.

கொத்தமல்லி தூள் - ½ தேக்கரண்டி

கருப்பு மிளகு தூள் - ¼ தேக்கரண்டி

மஞ்சள் - ½ தேக்கரண்டி

கல்  உப்பு - சுவைக்கு

உலர்ந்த மாதுளை விதைகள் அல்லது நெல்லிக்காய் துருவல்  - ½ தேக்கரண்டி

கரம் மசாலா - ¼ தேக்கரண்டி

 

தயாரிப்பு முறை

1. வெண்டைக்காயை கிடைமட்டத்தில் கீறிக் கொள்ளவும்.

2. தேங்காய் மற்றும் அனைத்து மசாலா கலவையை அதில்  திணிக்கவும்

3. அவ்வாறு திணிக்கப் பட்ட வெண்டைக்காய்களை  8 நிமிடங்கள் நீராவியில் வேக விடவும்.

4. சூடாக பரிமாறவும்.

 

>>>>>>>>>>>