மிளகினால் பயனடையுங்கள்

மிளகினால் பயனடையுங்கள்

 

சுரீரென்ற காரத்தினை நினைக்கையில் , மனக்கண் முன்னே தோன்றுவது, மிளகும், தும்மலை வரவழைக்கும் அதன் தன்மையுமே . காரமான ருசிக்கும், மசாலா வாசனைக்கும் உலகம் முழுவதுமே  உபயோகிக்கப்பட்டு வருவது மிளகு. அது மட்டுமின்றி இந்தியாவில் 

பண்டைய காலந்தொட்டே  இருந்துவரும்  ஓர் வாசனைப் பொருள்.

இது மிகவும் விலையுயர்ந்த பொருள் என்பதாலேயே "கருப்பு தங்கம்" என அழைக்கப்படுகிறது.

பிற பெயர்கள்:

தாவரவியல் பெயர்      -             Piper Nigrum

ஆங்கிலம்                         -         Black Pepper

சம்ஸ்க்ருதம்                   -           மரிச்சா

ஹிந்தி                               -        காலி ம்ருச்

மிளகு பெப்பர் கார்ன் என்றும்  அழைக்கப்படுகிறது. சாதாரண ஜலதோஷம் முதல்  சீத பேதி [ bloody diarrhea ] வரை  பல நோய்களை  குணப்படுத்தக் கூடியதால் மிளகில் சூரிய சக்தி  இருப்பதாக நம்பப்படுகிறது.  ஜீரணத்தை மேம்படுத்தக்கூடியதும், நரம்புகளை ஊக்குவிக்கக்  கூடியதும், போஷாக்கு அளிக்கக்கூடியதுமான  மருந்தாகப் பயன்  படுகிறது. மிளகு, பசியைத் தூண்டக்கூடியதும், தலைவலிக்கு ஓர்  நிவர்த்தியுமாகும் .

 

பயன்பாட்டுக்கு  உகந்த முறைகள்:

 

  • ஜலதோஷம் : ஒரு தேக்கரண்டி கோதுமை சீவல்களை 5 மிளகுகளுடன், ஒரு கோப்பை நீரில் தேவை யான உப்பு சேர்த்து கொதிக்க வைத்து அந்நீரை அருந்தவும்
  • அஜீரணம் : மிளகு, சீரகம் இரண்டினையும் பொடி செய்து, மோரில் கலந்து குடிக்கவும்.
  • முகத்தில் பரு: சந்தனத்தையும், மிளகினையும் பொடி செய்து,குளிர்ந்த நீரில் கலந்து, முகத்தில் தடவவும்.
  • துர்நாற்றமுள்ள மூச்சும், இரத்தம் வடியும் ஈறுகளும் : மிளகு, உப்பு கலந்த பொடியினை உபயோகித்துப்  பல் துலக்கவும்.
  • பல் வலி: மிளகுப் பொடியினை இலவங்க எண்ணையுடன் கலந்து , பல் வலி இருக்கும் இடத்தில் தடவவும்.
  • ருமாட்டிக் மூட்டு வலி:தேங்காய் எண்ணையில் மிளகுப் பொடியினைக் கலக்கவும். அதனைக் கொதிக்கவைத்து, பாதிக்கப்பட்ட இணைப்புகளில் தடவவும்.
  • ஜுரம்: 1/4  தேக்கரண்டி மிளகுப் பொடியினை  வெல்லத்தில்  கலந்து, ஒவ்வொரு 

இரவும் உண்ணவும்.

  • தோல் வியாதி: தேங்காய் எண்ணையைச் சுடவைத்து,மிளகுப் பொடியைக் கலந்து பாதிக்கப் பட்ட இடத்தில் தடவவும்.
  • குளிர்: மிளகுக்   கஷாயத்தில் பால் கலந்து  அடிக்கடி குடிக்கவும்.

 

இக்கட்டுரை யை எழுதியவர் வாழும் கலையின் மூத்த ஆயுர்வேத மருத்துவரான டாக்டர் நிஷா மணிகண்டன் அவர்கள்.