two little girls playing on trees

உத்கர்ஷ யோகா

உடல் , உணர்ச்சி மற்றும் சமூகம் சார்ந்த ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

8 முதல் 13 வயதுடைய குழந்தைகளுக்கான பயிற்சி

முதல் வாரத்திலேயே மாற்றங்களைக் காணலாம்

பதிவு செய்ய

இதனால் குழந்தைகள் எவ்வாறு பயன் அடைகிறார்கள்?

icon

அவர்களது நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது; பசி தூண்டப்படுகிறது.

இப்பயிற்சியில் கொடுக்கப்படும் உடற்பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகளால் குழந்தைகளின் பசி உணர்வு தூண்டப்படுகிறது; நோயெதிர்ப்பாற்றல் மற்றும் சக்தி அதிகரிக்கிறது. நலவாழ்வு மற்றும் முழுமையான ஆரோக்கியத்தோடு இருக்கும் உணர்வு மேம்படுகிறது.

icon

கோபதாபங்களால் எழும் சிக்கல்களுக்கு தீர்வுகாண உதவுகிறது

குழந்தைகள் கோபம் , வன்தாக்கம், மனச்சோர்வு ஆகியவற்றின் பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு, தமது முழு ஆற்றலையும் ஆக்கபூர்வமாக உபயோகிக்க உதவுகிறது.

icon

கவன வீச்சு அதிகரிக்கிறது

ஆய்வின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட நமது பயிற்சிகள் குழந்தைகளை மனஅமைதியுடன் இருக்க வைக்கிறது.அத்துடன் அவர்களது கவனக்குவிப்பு ,நினைவாற்றல், ஒருமுகப்பட்ட கவனம் ஆகியவற்றை அதிகரிக்கிறது.

icon

மன மகிழ்ச்சி அதிகரித்தல்

நமது கேளிக்கையான கலந்துரையாடல்களால் குழந்தைகள் தம் மனத் தயக்கங்களைக் கைவிட்டு ,தமது உண்மையான , இயல்பான , மகிழ்ச்சிகரமான சுபாவத்தை அறிந்து கொள்கிறார்கள்.

உத்கர்ஷ யோகா என்பது என்ன?

குழந்தைகளிடம் இருக்கும் அபரிமிதமான ஆற்றலானது , மனப்பதட்டம் , கோபம், வன்தாக்கம் , மனச்சோர்வு போன்ற பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது.

உத்கர்ஷ யோகா பயிற்சியில், குழந்தைகளுக்கு சில எளிய சுவாச உத்திகள், சில ஞானக்கோட்பாடுகள் மற்றும் ஆற்றல் மிக்க சுதர்ஷனக் கிரியா பயிற்சி ஆகியவை பயிற்றுவிக்கப் படுகின்றன. இந்த உத்திகள் . அவர்கள் தமது ஆற்றலை நேர்மறையான பாதையில் செலுத்திச் செயல்பட உதவுகின்றன. அவர்களது மனம் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதால் கவனக் குவிப்பு மேம்படுகிறது; தெளிவு மற்றும் நினைவாற்றல் திறன் அதிகரிக்கிறது. அத்துடன் குழுவாக இணைந்து செயல்படத் தேவையான ஊக்கமும் , பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறனும் அவர்களுக்குக் கிடைக்கிறது.

இங்கு அனைவரும் நம்மைச் சார்ந்தவர்கள் எனும் ஒற்றுமை உணர்வோடு ஒரு மகிழ்சிகரமான , ஈடுபாடு மிக்க சூழலில் கற்றலும் ,மற்றவர்களோடு கலந்து உறவாடுதலும் நிகழ்கிறது. ஒரு மிகப்பெரிய புன்னகையையும், ‘ஆம்’ எனும் மனதையும் குழந்தைகள் இங்கிருந்து எடுத்துச் செல்கிறார்கள்.

YouTube Thumbnail

நிறுவனர்

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் உலகளாவிய மனிதநேயரும், ஆன்மீகத் தலைவரும், அமைதித் தூதுவரும் ஆவார். மன அழுத்தமற்ற, வன்முறையற்ற சமூகத்திற்கான, முன்னெப்போதும் இல்லாத, உலகளாவிய இயக்கத்தை அவர் முன்னெடுத்துள்ளார்.
மேலும் அறிக

நான் இப்பயிற்சியை மேற்கொள்ள விரும்புகிறேன் ஆனாலும்....

இப்பயிற்சி குறித்து மேலும் விளக்கங்களை அளிக்க முடியுமா ?

உத்கர்ஷ யோகா பயிற்சி , நமது புராதனமான உத்திகளின் அடிப்படையில் குருதேவர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களால் வடிவமைக்கப்பட்ட யோக உத்திகள் மற்றும் பயிற்சி முறைகளையும் உள்ளடக்கியது. இப்பயிற்சியில் குழந்தைகள் தியானம், யோகாசனங்கள், மூச்சுப் பயிற்சி உத்திகள் ஆகியவற்றைக் கற்றுக்கொள்கிறார்கள். அத்துடன் தமது அச்சங்கள் , மனப்பதட்டங்கள் போன்றவற்றிலிருந்து விடுபட்டு தமது வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் முழுமையாக வாழவும் கற்றுக்கொள்கிறார்கள். மேலும் இப்பயிற்சியில் ஆன்மீகம் மற்றும் நமது பாரம்பரியம் ஆகியவற்றிலும் அவர்களுக்கு அறிமுகம் கிடைக்கிறது.

இந்தப் பயிற்சியால் எனது ஆரோக்கியம் மேம்படுமா?

ஆம், நிச்சயமாக மேம்படும். சுதர்ஷன கிரியா பயிற்சியை அன்றாடம் செய்வதால் நன்கு தூக்கம் வரும்; நோயெதிர்ப்புத் திறன் கூடும். அத்துடன் மனஅழுத்தம் மற்றும் உளச்சோர்வு ஆகியவை மட்டுப்படுகின்றன. இந்தப் பயிற்சியில் பங்குபெற்றுப் பயனடைந்தோர் அளித்துள்ள சான்றுகளை நீங்கள் படிப்பது உங்களுக்கு மிகவும் தெளிவை அளிக்கும். உங்கள் சுகவீனங்கள் குறித்த விவரங்களை உங்களது ஆசிரியரிடம் முன்கூட்டியே பகிர்ந்துகொள்வதால் அவரால் உங்களுக்கு மிகவும் உன்னதமான மற்றும் தனிப்பட்ட சிறப்பான அனுபவங்களை வழங்க இயலும்.

நீங்கள் எதற்காக, இப்பயிற்சியைக் கற்பிக்க கட்டணம் வசூலிக்கிறீர்கள் ?

முதலாவதாக, நீங்கள் இப்பயிற்சிக்கென உரிய நேரத்தை அர்பணிக்க வேண்டும் எனும் நோக்கம். உங்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாத அரிய திறன்களை உங்களுக்குக் கற்பிப்பதோடு, நீங்கள் அளிக்கும் நன்கொடை நிதி இந்தியாவில் நடைபெறும் பல சேவைப் பணிகளுக்குப் பயன்பட வேண்டும் என்பது மற்றொரு நோக்கம். பழங்குடியினர் சமூகத்தைச் சார்ந்த குழந்தைகள் (70000 பேர் ) பள்ளி சென்று கல்வி பயில உதவுவது , நதிகள் (40 ) புனரமைப்பு , கிராமப்புற இளைஞர்கள் (2,04,802 பேர் ) தம் வாழ்வாதாரத்தைப் பெறத் தேவையான திறனளிக்கும் பயிற்சி , சூரியசக்தி கொண்டு கிராமங்களை (720) ஒளிரச்செய்யும் திட்டம் போன்ற பல சேவைத் திட்டங்கள் அவற்றில் சிலவாகும்.

எனக்கு மனஅழுத்தம் போன்ற எதுவும் இல்லை. நான் எதற்காக இப்பயிற்சியை எடுத்துக்கொள்ள வேண்டும்?

உங்களுக்கு மனஅழுத்தம் இல்லையென்பது , மிகவும் மகிழ்ச்சிக்குரியது! நீங்கள் ஒரு சிறப்பான வாழ்க்கையை வாழ்கிறீர்கள்! இப்போது பின்வரும் சூழ்நிலைகளை சற்று நினத்துப்பருங்கள். உங்களிடம் உள்ள பணம் அனைத்தும் செலவான பின்புதான் நீங்கள் பணத்தை சேமிக்கத் துவங்குவீர்களா? அதுபோலவே , உங்கள் ஆரோக்கியம் முற்றிலும் அழிந்தபின்புதான் உடல்பயிற்சி செய்யத் துவங்குவீர்களா? உங்கள் உள்ளார்ந்த சேமிப்புகளான அதிர்சிகளிலிருந்து மீளும்தன்மையையும் , உங்களது ஆற்றலையும் வளப்படுத்தி வைத்துக்கொண்டால் உங்களுக்குத் தேவை எழும்போது அவற்றை உபயோகித்துக்கொள்ள இயலும் , அல்லவா? பாருங்கள் , இதற்கான முடிவை நீங்கள்தான் எடுக்க வேண்டும். ஒருவேளை மனஅழுத்தம் வரும்வரை நீங்கள் காத்திருக்கலாம். அப்போதும் உங்களுக்கு உதவ இப்பயிற்சி, உங்களது சுற்றுவட்டாரத்தில் கிடைக்கும்.