மன அழுத்தம்
அழுத்தமில்லா மனம் என்பது அனைவரின் பிறப்புரிமையாகும்
மனஅழுத்தம் நமது சிந்தனை, உணர்வு, மற்றும் நடத்தையை பாதிப்பதால், அதன் தாக்கம் நம் வாழ்வின் அனைத்து அம்சங்களின் மீதும் இருக்கிறது. மன அழுத்தத்தை நம் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதித்தால் அதன் விளைவுகள், பேரழிவையும் துயரத்தையும் தருபவையாகவே இருக்கும். இருப்பினும், அதிலிருந்து விடுபடுவது மக்களுக்கு கடினமாகவே இருக்கிறது. “ஓ நான் வருத்தப்படவோ, எரிச்சலடையவோ, கோபப்படவோ கூடாது", என்பது நமக்கு அறிவுப்பூர்வமாக தெரியும். ஆனாலும், நடைமுறை வாழ்க்கையில் அது சாத்தியப்படுவதில்லை. அந்த ஒரு தருணம் வருகையில் எதிர்மறைத் தன்மை ஒரு வெள்ளம் போல் வந்து, நம்மை நிலைகுலையச் செய்துவிடுகிறது.
நம் வீட்டிலோ, பள்ளியிலோ யாருமே நமக்கு மன அழுத்தத்தை கையாள கற்றுத் தருவதில்லை. இங்குதான் சுதர்சன கிரியா நமக்கு பெரிதும் உதவுகிறது. அது நம்மை அடித்துச் செல்லும் உணர்வுகளை கடந்து செல்ல உதவுகிறது. நம்முள் உறையும் ஒரு நுட்பமாக இருந்து - ஒரு தானியங்கி சுவர் போல் நம்முள் செயல்பட்டு, எதிர்மறை உணர்வுகளை எளிதாக வெல்ல சுதர்சன கிரியா உதவி புரிகிறது..
மனஅழுத்தத்தை விரைவில் குறைக்க 5 ஆற்றல்மிக்க ஆலோசனைகள்

சாமர்த்தியமாக வேலை செய்யுங்கள், மன அழுத்தம் இல்லாமல் வேலை செய்யுங்கள்!

மன அழுத்தத்தை நீக்க 5 யோக ஆசனங்கள்

மன அழுத்தத்தை விரைவாக அகற்றுவது எப்படி?

மனப் பதட்டத்திற்கு ஆளாகும் குறைபாடு நீங்க 9 யோகா அறிவுரைகள்

பதட்டத்தை வெல்ல 5 எளிய யுக்திகள்

மன அழுத்தம் பற்றிய சில மறைந்திருக்கும் உண்மைகள்
சைக்கிள் ஓட்டுவதன் பின்னிருக்கும் ரகசியம் என்ன? சமநிலை! மையத்தில் இருத்தல் பற்றியது: வலதுபுறமோ இடதுபுறமோ சாய்ந்து விழாது இருத்தல். சைக்கிள் ஒருபக்கமாக சாயும்போது, அதை மீண்டும் சமநிலைக்கு கொண்டு வருவீர்கள். சமநிலை பிறழும்போது அதன் கஷ்டத்தை உணர்வீர்கள். அதை கவனியுங்கள், அலட்சியம் செய்யாது அதை ஏற்றுக் கொண்டு மீண்டும் சமநிலைக்கு வாருங்கள்.
எதிர்மறைத்தன்மையின் மூலம்
எதிர்மறை எண்ணம் எங்கிருந்து உதயமாகிறது என்று சிந்தித்திருக்கிறீர்களா? எதிர்மறை எண்ணங்களின் மூலத்தை கூர்ந்து கவனித்தால், அவை பதற்றத்திலிருந்தும், மனஅழுத்தத்திலிருந்துமே வருகின்றன என்பதை புரிந்து கொள்வீர்கள். அழுத்தம் இல்லாமல், மகிழ்ச்சியாக இருப்பவருக்கு எதிர்மறை எண்ணங்கள் எழுவதில்லை. துயரத்தில் மேலும் மேலும் ஆழ்ந்து போகும்போதுதான் எதிர்மறை எண்ணங்கள் மேலும் மேலும் எழுகின்றன.
உந்துதல் அல்ல
பதற்றமும், மன அழுத்தமும் தீவிரமாக செயல் புரிவதற்கும், ஆக்கபூர்வ மனநிலைக்கும் ஒருபோதும் உந்துதலாக முடியாது. தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் என்று பொதுவாக சொல்வதுண்டு. ஆனால் கடந்த 40 ஆண்டுகளில், தீவிரமான பதற்றமும், மனஅழுத்தமும் நிறைந்திருக்கும் ஆப்கானிஸ்தான், லெபனான், மற்றும் பெய்ரூத் போன்ற இடங்களிலிருந்து முக்கியமான கண்டுபிடிப்புகள் எதுவும் வெளிவரவேயில்லை.
சிறியவற்றிலேயே தேங்கியிருத்தல்
உங்கள் மனம் எல்லையற்ற தன்மையில் பறந்து விரியாமல், சிறிய, முக்கியமற்ற விஷயங்களிலேயே முடங்கியிருப்பது தான் மனஅழுத்தம் என்பதாகும். இவை அனைத்தும் மாற்றத்துக்கு உட்பட்டவை. ஆனால் நீங்கள் இப்படி மாறிக் கொண்டே இருப்பவற்றை பிடித்துக் கொண்டு, பின்னர் செயல்பட தொடங்குகிறீர்கள்.
தொடர்புடைய பயிற்சிகள்
தியானம் உங்களை திறன்மிக்கவராகவும், ஆற்றல்மிக்கவராகவும், அழுத்தமில்லாதவராகவும், மகிழ்ச்சியானவராகவும் ஆக்குகிறது.
சஹஜ் சமாதி தியான யோகா
*உங்கள் நன்கொடை பல சமூகப் பணிகளுக்கு பயன்படுகிறது
ஸ்ரீ ஸ்ரீ யோகா வகுப்புகள்
சக்தி பெறலாம்`• ஆரோக்கியம் மற்றும் உடலின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தலாம் • வலிமை மற்றும் நிலைதன்மையை பெறலாம்
*உங்கள் நன்கொடை பல சமூகப் பணிகளுக்கு பயன்படுகிறது
ஹேப்பினஸ் புரொகிராம்
மன அழுத்தத்தை அகற்றுகிறது • உறவுகளை மேம்படுத்துகிறது • நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துகிறது
*உங்கள் நன்கொடை பல சமூகப் பணிகளுக்கு பயன்படுகிறது
ஹேப்பினஸ் புரொகிராம் ஃபார் யூத்
*உங்கள் நன்கொடை பல சமூகப் பணிகளுக்கு பயன்படுகிறது
What is Stress?
Stress is when there's too much to do, too little time & no energy left. Either you reduce the workload, which doesn't happen in the days, or you increase the time. That also doesn't happen when you are tired. You want to take more time for yourself to recuperate. So the only visible option we are left with is to increase your energy level.
வாழ்க்கையை மாற்றியமைக்கும் அனுபவம்
வேலை அதிகமாகவும், நேரமும் சக்தியும் குறைவாகவும் இருக்கும்போதுதான் மன அழுத்தம் ஏற்படுகிறது. ஒன்று நீங்கள் வேலைபளுவை குறைத்துக்கொள்ளவேண்டும், அது இன்றைய சூழ்நிலையில் முடியாத காரியம் அல்லது நேரத்தை அதிகரித்துக் கொள்ளவேண்டும். அதுவும் நடக்க கூடியதல்ல. நாம் சோர்வாக இருக்கும்போது, அதிலிருந்து மீண்டுவர நமக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. ஆகவே நம் சக்தியின் அளவை அதிகரித்துக் கொள்வதுதான் நம்மிடமுள்ள ஒரே வழி.
- குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி?
உங்கள் சக்தியை அதிகரித்துக்கொண்டால், மனஅழுத்தம் தானாகவே குறைந்து விடும்.

தியானம்
ஒரு சில நிமிட நேர தியானம் அனைத்து விதமான மன அழுத்தத்திலிருந்தும் விடுதலை அளிக்கும். அது உங்களை திறன்மிக்கவராகவும், ஆற்றல்மிக்கவராகவும், அழுத்தமில்லாதவராகவும், மகிழ்ச்சியானவராகவும் ஆக்குகிறது..
வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் சுவாச நுட்பம்
சுதர்சன கிரியா™
மன அழுத்தமில்லா வெற்றி
சைக்கிள் ஓட்டுவதன் பின்னிருக்கும் இரகசியம் என்ன? சமநிலை! மையத்தில் இருத்தல் பற்றியது: வலதுபுறமோ இடதுபுறமோ சாய்ந்து விழாது இருத்தல். சைக்கிள் ஒருபக்கமாக சாயும்போது, அதை மீண்டும் சமநிலைக்கு கொண்டு வருவீர்கள். சமநிலை பிறழும்போது அதன் கஷ்டத்தை உணர்வீர்கள். அதை உற்று நோக்குங்கள். அலட்சியம் செய்யாது அதை ஏற்றுக் கொண்டு மீண்டும் சமநிலைக்கு வாருங்கள்.
சமநிலையை அடையுங்கள்
வேலைக்கும் புத்துணர்சிக்கும் செலவிடும் நேரத்தை சமநிலைப்படுத்துங்கள். உணவிலும் உடற்பயிற்சியிலும் கவனம் இருக்கட்டும், மேலும் தியானத்திற்கும், ஓய்விற்கும் சிலமணி நேரம் ஒதுக்குங்கள்.
கலைகளில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்
இடது மூளையின் செயல்பாட்டை சமன்படுத்த வலது மூளை செயல்பாடுகளான ஓவியம், இசை, கவிதை போன்ற படைப்பூக்கம் நிறைந்த பொழுதுபோக்குகளில் ஈடுபடுங்கள்.
சேவை செய்யுங்கள்
உங்களை சுற்றியிருப்பவர்களுக்கு உபயோகமாக இருங்கள். சேவை செய்யும்போதும், கருணை நிறைந்த செயல்களைச் செய்யும்போதும் உடனடியாக உங்களின் உள்ளே ஒரு புத்துணர்வை அவை கொண்டுவருகின்றன.
எதிலுமே பற்றுதலோ வெறுப்போ இல்லாமல், வாழ்வின் எல்லா அம்சங்களிலும் சமநிலை பேணுதலே உண்மையான வெற்றியின் ரகசியம்.













