ஹேப்பினஸ் புரொகிராம்
உலகெங்கும் உள்ள, 45 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களால் பெரும் விருப்பத்தோடு பயிற்சி செய்யப்படும் சுதர்சன கிரியா எனும் ஆற்றல்வாய்ந்த மூச்சு பயிற்சி உத்தியை உள்ளடக்கிய ஆனந்த அனுபவப்பயிற்சியை பயிலுங்கள்.
மன அழுத்தத்தை அகற்றுகிறது • உறவுகளை மேம்படுத்துகிறது • நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துகிறது
*உங்கள் நன்கொடை பல சமூகப் பணிகளுக்கு பயன்படுகிறது
பதிவு செய்யஇந்த பயிற்சியால் எனக்கு கிடைக்கும் பயன் என்ன?
மனஅமைதி மேம்படுதல்
மனதை அமைதிப்படுத்த உதவும் சிறந்த உத்திகளைக் கண்டறிந்து அன்றாட வாழ்வில் மேன்மேலும் அமைதியையும், ஆனந்தத்தையும் கொண்டு வருதல்.
ஆற்றல் அதிகரிப்பு
களைப்பிலிருந்து விடுபட்டு மேம்பட்ட ஆற்றல் நிலைகளை அனுபவித்தல். நாள்தோறும் நிர்ணயித்த இலக்குகளை செவ்வனே செய்து முடித்தல்.
மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் அகற்றுதல்
ஆய்வின் அடிப்படையிலான உத்திகளைக் கற்றுக்கொண்டு மன அழுத்தத்தைக் குறைத்து, பதட்டத்தில் இருந்து விடுபட்டு, சவால்களுக்கு இடையிலும் இளைப்பாறுதல்.
உங்கள் மனதின் மீதான ஆதிக்கம்
இந்தப் பயிற்சி, இன்றைய வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளை எதிர்கொள்ளும் தொன்மையான ரகசியங்களை நமக்கு பகிர்ந்தளிக்கிறது. வாழ்க்கையை மிகுந்த விழிப்புணர்வோடும் ஞானத்துடனும் வாழ கற்றுக்கொள்கிறோம்.
வாழ்க்கையை மாற்றியமைக்கும் அனுபவம்
சுதர்சன கிரியா பற்றி அறிவியல் என்ன சொல்கிறது?
உலகெங்கும் சுதர்சன கிரியா குறித்து தனித்தனியே மேற்கொள்ளப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு அறிக்கை வெளியீடுகள் கீழ்கண்ட பலன்களைத் தொகுத்தளிக்கின்றன:
▴ 33%
6 வாரங்களில் அதிகரித்தல்
நோய் எதிர்ப்பு ஆற்றல்
▴ 57%
6 வாரங்களில் குறைதல்
மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள்
▴ 21%
1 வாரத்தில் அதிகரித்தல்
மன நிறைவு
வாழ்க்கையை மாற்றும்
உங்கள் பதற்றத்தை 44% குறைக்கக்கூடிய எளிதான சுவாசப் பயிற்சி
சுதர்சன கிரியா உடலில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவுகிறது
நிறுவனர்
குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் உலகளாவிய மனிதநேயரும், ஆன்மீகத் தலைவரும், அமைதித் தூதுவரும் ஆவார். மன அழுத்தமற்ற, வன்முறையற்ற சமூகத்திற்கான, முன்னெப்போதும் இல்லாத, உலகளாவிய இயக்கத்தை அவர் முன்னெடுத்துள்ளார்.
நான் இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புகிறேன், ஆனால்...
இந்த உத்திக்கு ஏதேனும் பக்கவிளைவுகள் உண்டா?
ஒருபோதும் மறையாத புன்னகையே இதன் ஒரே பக்கவிளைவாகும். உலகெங்கும் லட்சோப லட்சம் மக்கள் சுதர்ஷனக் கிரியாவை அன்றாடம் பயிற்சி செய்கின்றனர். அவர்கள் அடைந்த பயன்கள் யாவும் ஆவணப் படுத்தப்பட்டுள்ளன.
நமது உத்திகளைப் பயிற்சி செய்வது முற்றிலும் பாதுகாப்பானது. உங்களுக்கு ஆஸ்துமா, உயர் இரத்தஅழுத்தம், இதய நோய், முதுகு வலி போன்ற பாதிப்புகள் இருக்குமெனில் அதற்கேற்ற மாற்றங்களோடு இப்பயிற்சி வழங்கப்படும்.
இப்பயிற்சியால் எனது உடல் நலம் மேம்படுமா?
ஆம், நிச்சயமாக மேம்படும்! சுதர்ஷனக் கிரியாவை அன்றாடம் பயிற்சி செய்வதால் ஆழ்ந்த உறக்கம் கிடைக்க ஏதுவாகிறது; நோயெதிர்ப்பாற்றல் அதிகரிக்கிறது; அத்துடன் மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்றவை மட்டுப்படுகின்றன. இப்பயிற்சியை செய்பவர்கள் தாம் அடைந்துள்ள பயன்களைப் பகிர்ந்துள்ள அனுபவச் சான்றுகளை நீங்கள் படித்துப்பாருங்கள். உங்களது நோய்கள் குறித்த விவரங்களை நீங்கள் முன்கூட்டியே உங்கள் ஆசிரியரிடம் தெரிவித்துவிடுவது மிகவும் அவசியமாகும். அதனால் அவரால் உங்களுக்கு மிகவும் சிறப்பான, பொருத்தமான அனுபவங்களை வழங்க இயலும்.
நீங்கள் எதற்காக பயிற்சி அளிக்க கட்டணம் வசூலிக்கிறீர்கள்?
இப்பயிற்சிக்கான உரிய நேரத்தை நீங்கள் அர்ப்பணிப்பதை உறுதிப்படுத்துவது முதன்மையான காரணமாகும். உங்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாத அரிய திறன்களை இப்பயிற்சியால் உங்களுக்குத் தருவதோடு , நீங்கள் அளிக்கும் நன்கொடை நிதி இந்தியாவில் நடைபெறும் பல சேவைப் பணிகளுக்குப் பயன்பட வேண்டும் என்பது மற்றொரு காரணமகும். பழங்குடியினர் சமூகத்தைச் சார்ந்த 70000 குழந்தைகள் பள்ளி சென்று கல்வி பயில உதவுவது, 43 நதிகளின் புனரமைப்பு மற்றும் 2,04,802 கிராமப்புற இளைஞர்கள் தம் வாழ்வாதாரத்தைப் பெறத் தேவையான திறனளிக்கும் பயிற்சி, சூரியசக்திகொண்டு 720 கிராமங்களை ஒளிரச்செய்யும் திட்டம் போன்ற பல சேவைத் திட்டங்கள் அவற்றில் சிலவாகும்.
எனக்கு மனஅழுத்தம் போன்ற எதுவும் இல்லை. நான் எதற்காக இப்பயிற்சியை எடுத்துக்கொள்ள வேண்டும்?
உங்களுக்கு மனஅழுத்தம் இல்லையென்பது, மிகவும் மகிழ்ச்சிக்குரியது! நீங்கள் ஒரு சிறப்பான வாழ்க்கையை வாழ்கிறீர்கள்! இப்போது பின்வரும் சூழ்நிலைகளை சற்று நினைத்துப்பருங்கள்: உங்களிடம் உள்ள பணம் அனைத்தும் செலவான பின்புதான் நீங்கள் பணத்தை சேமிக்கத் துவங்குவீர்களா? அதுபோலவே, உங்கள் ஆரோக்கியம் முற்றிலும் சீர்குலைந்த பின்புதான் உடற்பயிற்சி செய்யத் துவங்குவீர்களா? இல்லைதானே? உங்கள் உள்ளார்ந்த சேமிப்புகளான அதிர்ச்சிகளிலிருந்து மீளும்தன்மையையும், உங்களது ஆற்றலையும் வளப்படுத்தி வைத்துக்கொண்டால் உங்களுக்குத் தேவை எழும்போது அவற்றை உபயோகித்துக்கொள்ள இயலும், அல்லவா? பாருங்கள், இதற்கான முடிவை நீங்கள்தான் எடுக்க வேண்டும். ஒருவேளை மனஅழுத்தம் வரும்வரை நீங்கள் காத்திருக்கலாம். அப்போதும் உங்களுக்கு உதவ இப்பயிற்சி, உங்களது சுற்றுவட்டாரத்தில் கிடைக்கும்.
இப்போது புரிந்து விட்டது! சரி பயிற்சியில் பங்குபெற பதிவு செய்கிறேன்!