உலக தியான தினம்

● Livewith Gurudev Sri Sri Ravi Shankar

● Liveat 8:00 pm IST on 21st December

icon-love

44 ஆண்டுகளாக வாழ்க்கையை மாற்றி வருகிறது

icon-earth-globe

10,000+ உலகம் முழுவதும் தியான மையங்கள்

icon-location

180 நாடுகள்

icon-group

80 கோடிக்கு மேல் மக்களை சென்றடைந்துள்ளது

உலக தியான தினம்: ஒரு உலகப் புரட்சி

நாற்பது ஆண்டுகளாக குருதேவர் தனி நபர், சமூகம் மற்றும் நாடுகளில் மாற்றத்தைக் கொண்டுவந்து, தம்முள் உறையும் சக்தியை கண்டறிய லட்சக்கணக்கானோரை ஊக்குவித்துள்ளார். தியானத்தின் மூலம் போர்களை முடிவுக்கு கொண்டுவருதல் மற்றும் போராளிகள் சரணடைய வழிவகுத்தல் முதல் கல்வியில் புரட்சியை ஏற்படுத்துதல் மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் போன்ற பல ஆழமான மாற்றங்களை, குருதேவர் கொண்டு வந்துள்ளார். அவரது முயற்சிகள், எண்ணற்ற சிறைக் கைதிகள் மற்றும் கிராமப்புற பெண்களின் வாழ்க்கையை மாற்றியமைத்ததோடு மட்டுமல்லாமல், போதைப்பொருளில்லா வளாகங்களை உருவாக்குதல், கார்ப்பரேட் நிறுவனங்களில் நல்வாழ்வை கொண்டுவருதல் மற்றும் உலகாளாவிய நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றிற்கு உதவுவதன் மூலம் உலகின் 180 நாடுகளில், பல லட்சம் மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

2024 ம் ஆண்டில், ஐ.நா சபை டிசம்பர் 21 ம் தேதியை உலக தியான தினமாக அறிவித்தது. 21 டிசம்பர் 2024 அன்று நடந்த இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியில், உலகெங்கிலும் உள்ள பல லட்சம் மக்களை குருதேவ் தியானத்தில் வழிநடத்தினார்.

செயல்முறையில் தியானம்

வாழும் கலையை குருதேவ் நிறுவினார்.

1981

யுனைடெட் கிங்டமின் எடின்பரோ நகரத்தில் உள்ள ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்ற குருதேவ் அழைக்கப்பட்டார்.

2004

இந்தியாவின் பெங்களூரு நகரத்தில் நடந்த வாழும் கலையின் வெள்ளி விழா கொண்டாட்டங்களில் 150 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 2.5 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் குருதேவுடன் தியானம் செய்தபோது எல்லைகள் பலவீனமாகின.

2006

வாஷிங்டன் டி சி யில் உள்ள ஜான் எப். கேன்னடி கலை நிகழ்ச்சி மையத்தில், மனித விழுமியங்களுக்கான அறிக்கையை குருதேவ் வெளியிட்டார்.

2007

உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் வாழும் கலையின் சாதனைகளையும், பன்முகத்தன்மையையும் கொண்டாட, 151 நாடுகளிலிருந்து, 70,000 க்கும் மேற்பட்ட மக்கள் ஜெர்மனியின் பெர்லின் நகரத்தின் ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் ஒன்றுகூடினர்.

2011

அர்ஜென்டினாவின் ப்யூனஸ் அயர்ஸ் நகரத்தில் 1,50,000 பேர்கள் குருதேவருடன் துடிப்பு நிறைந்த.இசையும் ஆழமான அமைதியான தியானமும் கலந்த தனித்துவமான அனுபவத்தை பெற்றனர்.

2012

நான் தியானம் செய்கிறேன், ஆப்பிரிகா! –.இது ஆப்பிரிகாவில் அமைதியை மேம்படுத்தவும், தியானத்தை, அமைதி வழிமுறைகளில் ஒரு தொகுதியாக பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், மேற்கொள்ளப்பட்ட மிக எளிமையான பிரச்சாரமாகும். இதன் தாக்கம், ஆப்பிரிகாவின் பல மில்லியன் மக்களால் உணரப்பட்டது.

2013

ஈராக்கில் அபாயம் நிறைந்த பகுதிகள், போர்மூண்ட பகுதிகள் உட்பட பல இடங்களுக்கு குருதேவர் சென்று, அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் அளித்தார்.

2015

உலக கலாசார விழா II 3.75 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் குருதேவருடன் தியானம் செய்தார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்திருந்தவர்கள், உலகின் மிகப் பெரிய மிதக்கும் மேடையில் கலாச்சார நிகழ்ச்சிகளை அவர்கள் கண்டுகளித்தார்கள்.

2016

அரை நூற்றாண்டு நீடித்த மோதலை முடிவுக்கு கொண்டுவர, தியானத்தை முன்னிலை படுத்திய குருதேவரின் முயற்சியினால், ஃபார்க் - கொலம்பியா அமைதி ஒப்பந்தம் சாத்தியமானது.

2016

ஆயிரக்கணக்கானோரை குருதேவர் தியானத்தில் வழி நடத்தியபோது, பொதுவாக பலதரப்பட்ட இசை நிகழ்ச்சிகளும், நாடக நிகழ்வுகளும் நடக்கும் அரங்கமான ராயல் ஆல்பர்ட் ஹால், அமைதியில் மூழ்கியது.

2016

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ”தியானத்திலிருந்து மத்தியஸ்தத்தை நோக்கி” என்ற தலைப்பில் உறையாற்ற குருதேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

2019

கொரோனா காலத்தில், உலகம் எதிர்கொண்ட மிக மன அழுத்தம் நிறைந்த கால கட்டத்தில், குருதேவர் தினமும் இரண்டு முறை நேரலை தியான அமர்வுகளை இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடத்தி, கோடிக்கணக்கான மக்களுக்கு மன வலிமை மற்றும் ஆறுதலை அளித்தார்.

2020

"நான் அமைதியின் பக்கம் நிற்கிறேன்” - ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பல நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட குருதேவர், அங்கு பல பேரை தியானத்தில் வழிநடத்தி, மோதலும் போரும் சூழ்ந்த காலகட்டத்தில், மனஅமைதியை அடைய அவர்களுக்கு உதவினார்.

2022

உலக கலாசார விழாவிற்காக, வாஷிங்டன் டி.சி யின் தேசிய வணிக வளாகத்தில் 1.1 மில்லியன் மக்கள் திரண்டு, 17,000க்கும் மேற்பட்ட உலகக் கலைஞர்கள் வழங்கிய ஆற்றல் மிகுந்த நிகழ்ச்சிகளும், குருதேவர் வழிநடத்திய அமைதியான தியானமும் சேர்ந்து, இந்த விழா தனித்துவமான அனுபவமாக அமைந்தது.

2023

நான் ஏன் பங்கேற்க வேண்டும்?

icon

ஒரு வரலாற்றுத் தருணம்

வரலாற்றைப் பற்றி வாசிப்பதை விட அதில் பங்கேற்பது சிறந்தது. ”நான் ஐ.நா வின் முதல் உலக தியான தினத்தில் பங்கேற்றேன்,” என்று யார்தான் சொல்ல விரும்ப மாட்டார்கள்?

icon

உலகளாவிய தியானம்

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் தியானிக்க உள்ளனர்; இது நடைபெறும்போது அதன் பயன்கள் பன்மடங்கு அதிகமாக இருக்கும்.

icon

தியான குரு

குருதேவருடன் தியானம் செய்வதென்பது ஒரு நிகழ்ச்சி அல்ல — அது ஒரு அனுபவம்!

உங்கள் தியானப் பயணத்தை தொடங்குங்கள்

குருதேவின் வழிகாட்டுதலுடன் கூடிய தியானம் ஒரு தொடக்கம் மட்டுமே. மாற்றத்தை கொண்டுவர வடிவமைக்கப்பட்ட எங்கள் பயிற்சிகளின் மூலம் உங்கள் ஆற்றலை வெளிக்கொணர்ந்து, மகிழ்ச்சியான, மனஅழுத்தம் இல்லா வாழ்க்கையை வாழுங்கள்.

நான் இன்னும் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்...

இதற்கு ஏதாவது தகுதி தேவையா?

உங்களால் சுவாசிக்க முடியும் என்றால் உங்களால் தியானமும் செய்ய முடியும்!

குழந்தைகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கலாமா?

5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் (ஆம், நீங்கள் சரியாகத் தான் படித்தீர்கள்) இந்நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.

தியானத்திற்கு முன்னனுபவம் தேவையா?

இல்லை! தியான வல்லுனராக இருக்க வேண்டிய அவசியமில்லை —உங்களையும், உங்கள் சுவாசத்தையும் மட்டும் கொண்டு வாருங்கள்.

நிகழ்ச்சிக்கு முன் நான் தியானத்தை முயன்று பார்கலாமா?

நிச்சயமாக! யூடியூபில் குருதேவரின் தியான சேனலான “ குருதேவரின் தியானங்கள்" என்ற இணைப்புக்குச் சென்று அதில் இருக்கும் நூற்றுக்கணக்கான, வழிகாட்டுதலுன் கூடிய தியானங்களிலிருந்து நீங்கள் விருப்பப்படி தேர்வு செய்து பயிற்சி செய்யலாம்.