மன நலம்

மன நலத்தை எளிதாக பேண அற்புதமான ரகசியங்களை கண்டறியுங்கள்!

உலகம் முழுவதும் சராசரியாக 350 மில்லியன் மக்களை மன நோய் பிரச்சினை பாதிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) சொல்கிறது. துரதிர்ஷ்டவசமாக, பலர் தாம் மனச்சோர்வடைந்திருப்பதை ஏற்றுக்கொள்வதே இல்லை; ஆகவே மனச்சோர்வடைந்திருப்பவர்களில் 50 சதவீதத்தினர் சிகிச்சை பெறுவதேயில்லை.

வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி, எதிர்மறை உணர்ச்சிகளையும் மனப்போக்கையும் கையாள நமக்கு கற்றுத்தரப் படுவதேயில்லை. உடல் நலம் பேணுவதை நாம் கற்றுத்தருகிறோம். ஆனால், மனநலம் பேணக் கற்றுத்தருவதில்லை. வெறும் பேச்சினாலும், ஆலோசனைகளினாலும் மன அழுத்தம் நீங்குவதில்லை. மன அழுத்தத்திலிருந்து வெளிவரவும், மனத்தை அமைதிப்படுத்தவும் சில நுட்பங்களையும், கருவிகளையும் நாம் கற்றுக் கொள்வது அவசியம். ஒருவர் மனச்சோர்வுக்கு ஏன் உள்ளாகிறார்? சிலருக்கு அது கடந்த காலத்திலேயே தேங்கி நிற்பதால் ஏற்படுகிறது, வேறு சிலருக்கு வருங்காலத்தை குறித்த பெருங்கனவுகளாலும், கவலையாலும் ஏற்படுகிறது. மாறாக வாழ்க்கை என்பது ‘விட்டுவிடுதல்’ எப்படி என தொடர்ந்து கற்பிக்கும் ஒரு செயல்முறையாகும். இந்த பிரபஞ்சத்துடன் நாம் இணைந்துள்ளோம் என்பதை நாம் பெரும்பாலும் உணர்வதேயில்லை; மாறாக சின்னஞ்சிறு ஆசைகளை கொண்ட சிறிய மனிதராகவே நம்மை எண்ணிக்கொள்கிறோம். இந்த சிறுமை கொண்ட மனதிலிருந்து எப்படி விடுபடுவது? நமது இருப்பின் மையத்தை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

வாழ்க்கையை மாற்றியமைக்கும் அனுபவம்

யோகா, தியான வகுப்புகள்

வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகள்