ஸ்ரீ ஸ்ரீ சன்ஸ்கார் கேந்திரா
ஸ்ரீ ஸ்ரீ விழுமியங்கள் மற்றும் கலாச்சார மையங்கள் என்று (SSCVC)
“ஒரு செடி முழுமையாக வளர நீர் தேவைப்படுவது போல, சிறு குழந்தைகள் மனித மாண்புகளை வளர்த்துக் கொள்ள ‘சன்ஸ்காரங்கள்’ தேவை.”
~ குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
பதிவு செய்யஸ்ரீ ஸ்ரீ சன்ஸ்கார் கேந்திராவை பற்றி
கருணை, இரக்கம், மன்னிக்கும் தன்மை, தாராள மனப்பான்மை, மரியாதை, நேர்மை, ஒழுக்கம், திருப்தி ஆகிய நற்பண்புகள் ஒவ்வொரு சமூகத்திலும் ஆழமாக பின்னிப்பிணைந்துள்ளன. ஆனால், சிறு குடும்ப அமைப்பு, ஊடகங்களின் தாக்கம், நேரமின்மை மற்றும் அவசரமான வாழ்க்கை முறை ஆகியவை, நம் செழுமையான பாரம்பரியத்திலிருந்து குழந்தைகளை விலக்கி, மனித மாண்புகளை வளர்ப்பதில் இடைவெளியை ஏற்படுத்துகின்றன.
ஸ்ரீ ஸ்ரீ சன்ஸ்கார் கேந்திராக்களில், குழந்தைகள் அடிப்படை மனித மாண்புகளை உள்வாங்கி, சிறந்த பண்புகளை வளர்த்துக்கொள்ளவும், நமது வளமான கலாச்சாரம் மற்றும் அதன் பன்முகத்தன்மையை போற்றவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
ஸ்ரீ ஸ்ரீ சன்ஸ்கார் கேந்திராவில் கதைகள், ஸ்லோகங்கள், மந்திர உச்சாடனம், அற்புதங்கள், விளையாட்டுகள், யோகா மற்றும் பல்வேறு செயல்பாடுகள் இந்த மகிழ்ச்சியான, உற்சாகமான மற்றும் அன்பான அமர்வுகளின் மையமாக உள்ளன. இந்தப் பயிற்சிகள் பள்ளிக் கல்வியை மேலும் மேம்படுத்தி, குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை கட்டியெழுப்புகின்றன.
சர்வதேச அளவில், இவை ஸ்ரீ ஸ்ரீ விழுமியங்கள் மற்றும் கலாச்சார மையங்கள் என்று அழைக்கப்படுகின்றன (SSCVC).

இந்த நிகழ்வின் மூலம் குழந்தைகள் பெறுவது என்ன
மனித மாண்புகளை உள்வாங்குதல்
உங்கள் குழந்தைகள் அக்கறை, மரியாதை, பொறுப்பு, நேர்மை, தாராள மனப்பான்மை போன்ற அடிப்படை மனிதப் பண்புகளுடன் மலர்வதை காணலாம்.
வலுவான அடித்தளம்
இளம் வயதிலேயே குழந்தைகளுக்கு ஒரு உறுதியான அடித்தளம் உருவாக்கப்படுகிறது. அது அவர்களின் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்தவும், மகிழ்ச்சியுடன் பொறுப்புகளை ஏற்கவும், போட்டி நிறைந்த உலகை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவும் உதவுகிறது.
பாரம்பரியங்களை மதிக்கும் மனப்பான்மை
குழந்தைகள் அறிவியல் மனப்பாங்கை வளர்த்துக் கொண்டு, தங்களின் பழமையான பாரம்பரியத்தை புரிந்துகொண்டு, வாழ்க்கையை ஒரு பரந்த கண்ணோட்டத்துடன் காண்கிறார்கள்.
கொண்டாட்டமும் , ஞானமும்
குடும்ப உறவுகள் வலுப்பெறுகின்றன. ஒன்று சேர்ந்து கொண்டாடுவதன் மூலம், குழந்தைகள் அதிக விழிப்புணர்வு பெறுவதோடு சமூகம் மற்றும் சுற்றுச்சூழலுடன் ஒரு வலுவான பிணைப்புணர்வைப் பெறுகிறார்கள்.
நினைவாற்றலும் கவனமும்
ஒரு ஆய்வின் படி, 2 ஆண்டுகள் மந்திரங்களை உச்சரிக்கும் பயிற்சியை மேற்கொண்டவர்கள், நினைவாற்றல் சோதனைகளில் சிறப்பாக செயல்பட்டனர், பிழைகள் குறைந்தன, மேலும் சோதனைகளை விரைவாக முடித்தனர். மேலும் தகவல்களுக்கு அந்த ஆய்வு கட்டுரையை பார்க்கலாம்
மந்திரங்களை உச்சாடனம் செய்வதின் நன்மைகள்
‘ஓம்’ (OM) மந்திரத்தை உச்சரிப்பது வேகஸ் நரம்பை தூண்டுகிறது, மேலும் இது மனச்சோர்வு மற்றும் வலிப்பு நோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆய்வுக் கட்டுரையை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
அடிப்படைப் பயிற்சிகள்
(6-10 வயது)
- இணையவழி தொகுதி M1-A
- 8 அமர்வுகள், ஒவ்வொன்றும், 1 மணி நேரம்
- இணையவழி தொகுதி M1-B
- 8 அமர்வுகள், ஒவ்வொன்றும் 1 மணி நேரம்
- நேரடி (In-person) தொகுதி M1
- 12 அமர்வுகள், ஒவ்வொன்றும் 2 மணி நேரம்
ராமாயண நிகழ்ச்சிகள்
(6-13 வயது)
- இணையவழி பகுதி A
- 8 அமர்வுகள், ஒவ்வொன்றும் 1 மணி நேரம்
- இணையவழி பகுதி B
- 8 அமர்வுகள், ஒவ்வொன்றும் 1 மணி நேரம்
- நேரடி அமர்வுகள்
- 10 அமர்வுகள், ஒவ்வொன்றும் 2 மணி நேரம்
என் மகள் இந்த பயிற்ச்சியால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள். விழாக்கள், சிறுகதைகள் மற்றும் மந்திரங்களுடன் சிறப்பாக விளக்கப்பட்டன. நான் அறியாத சில விஷயங்களை அவள் என்னிடம் சொல்லும்போது, நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். அவளை.ஸ்ரீ ஸ்ரீ சன்ஸ்கார் கேந்திரா பயிற்சிக்கு (SSSK)…
ஷில்பா
ஸ்ரீ ஸ்ரீ சன்ஸ்கார் கேந்திரா மூலம், நித்யன், இவ்வளவு சிறு வயதிலேயே, பல ஸ்லோகங்களையும், கதைகளையும் அறிந்திருக்கிறான், மேலும் வீட்டில் எனக்கு உதவத் தொடங்கியுள்ளான். இந்த அமர்வுகளுக்கு அவன் மிகவும் ஆர்வத்துடன் செல்கிறான்.
தர்ஷினி
ஒரு உள்முக சிந்தனையுள்ள மற்றும் கூச்ச சுபாவமுள்ள குழந்தையிலிருந்து, தன்னம்பிக்கையோடு சாதிக்க விரும்பும் சகஜமாக பழக்ககூடிய சிறுமியாக மாறிவிட்டாள்.
ஆஷிஷ்
யோகா, விளையாட்டுகள், கதைகள், ஸ்லோகங்கள் ஆகியவற்றின் கலவையுடன் வகுப்புகள் அருமையாக இருந்தன, என் மகன் அவற்றை வெவ்வேறு விஷயங்களில் பயன்படுத்துவதை நான் காண்கிறேன். இந்த அமர்வுகளில் கற்றுக்கொண்ட வீட்டு வைத்தியங்களையும் கூறுகிறான்.
கோமதி
நிறுவனர்
குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் உலகளாவிய மனிதநேயரும், ஆன்மீகத் தலைவரும், அமைதித் தூதுவரும் ஆவார். மன அழுத்தமற்ற, வன்முறையற்ற சமூகத்திற்கான, முன்னெப்போதும் இல்லாத, உலகளாவிய இயக்கத்தை அவர் முன்னெடுத்துள்ளார்.